குடியுரிமை சாசனம்

‘’சுரகிமு கங்கா" ஆறுகளை பாதுகாக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2021, 1 ம் கட்ட நிகழ்வாக கலியோடை ஆற்றங்கரையில் பழமரக்கன்றுகளும், மூங்கில் மர கன்றுகளும் நடுவது தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 13.10.2021 ம் திகதி பி.ப 03.00 மணிக்கு இடம்பெற்றது.
 
இதில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் (கல்முனை), உதவிப்பணிப்பாளர் வன பராமரிப்பு திணைக்களம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (சம்மாந்துறை), விவசாய போதனாசிரியர், கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சுற்றாடல் பிரிவு) மற்றும் விவசாயிகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
 
 
திரிய பியச வீட்டுக்கான 2ம் கட்டமாக 75000.00 ருபா பெறுமதியான காசோலை இன்று 14.10.2021 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
 
இதில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.
 
 

சமூர்த்தி சௌபாக்கிய ரூபா 600,000 வீட்டு வேலைத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட காசோலை ரூபாய் 100,000 இன்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் AC. அன்வர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல் ஷஹீட் அவர்களும் கலந்து கொண்டனர்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட இலக்கிய போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் கையெழுத்து, பாடல் நயத்தல் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் M.ஹிஜா ஹம்தா முதலாம் இடத்தினையும், J .பாத்திமா மின்ஹா இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளதுடன் வளர்ந்து வரும் பெண் கலைஞர் R.பாத்திமா முஜாமலா கவிதை பிரிவின் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் தலைமையில் கலாசார உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலகத்தை இலத்திரணியல் அலுவலகமாக (e-office) ஸ்தாபிப்பதற்கான முன்வேலைத்திட்டங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்களின் பங்கு பற்றுதலுடன் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 12.10.2021 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்களான Mr. K.Muhammad Rifthy (Head of ICT), Mr. RK. Ahmadh Rifai Kariapper (Senior Lecturer in ICT), Mr. P. Pirapuraj (Lecturer in ICT), Miss. M.S Shafana (Lecturer in ICT) , Dr. IM. Kalith (Lecturer in ICT) , Mr. M.J. Ahamed Sabani (Lecturer ICT) மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் AM. சுல்பிகார், சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்பகுழு உறுப்பினர்களும் பங்கு பற்றினர்.
 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top