நிந்தவூர் பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் தலைமையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் MC. பைசால் காசிம், திரு ரொட்ரிகோ உதவி பொலிஸ் அத்தியட்சகர் (கல்முனை) திரு ஜெலத் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (சம்மாந்துரை) நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், நிருவாக கிராம உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 29.10.2021ம் திகதி இடம்பெற்றது.





சமூர்த்தி சௌபாக்கிய ரூபா 200,000 வீட்டு வேலைத்திட்டத்திற்கான இரண்டாம் கட்ட காசோலை ரூபாய் 75,000 இன்று 22.10.2021ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமூர்த்தி திட்ட முகாமையாளர் யூ.எல்.றஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி மலசலகூட வேலைத் திட்டத்துக்கான கொடுப்பனவு இன்று 25.10.2021ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A.C. அன்வர் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர் U.L.றஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


















