




சமூர்த்தி சௌபாக்கிய ரூபா 600,000 வீட்டு வேலைத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட காசோலை ரூபாய் 100,000 இன்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் AC. அன்வர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல் ஷஹீட் அவர்களும் கலந்து கொண்டனர்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட இலக்கிய போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் கையெழுத்து, பாடல் நயத்தல் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் M.ஹிஜா ஹம்தா முதலாம் இடத்தினையும், J .பாத்திமா மின்ஹா இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளதுடன் வளர்ந்து வரும் பெண் கலைஞர் R.பாத்திமா முஜாமலா கவிதை பிரிவின் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் தலைமையில் கலாசார உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
























