சர்வதேச சிறுவர் தினத்தில் “அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்” எனும் தொனிப்பொருளிலான சிறுவர் தினம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பட்டினி அற்ற - மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றைக் கட்டியெழுப்பும் சிறுவர் சுற்றாடல் பாதுகாப்புப் படையணியைத் தாபித்தல் மற்றும் 100000 பலா மரங்களை நாட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM.ஆப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் T.ஜெஸான், நிர்வாக உத்தியோகத்தர் MTM. ஸரீம், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பாத்திமா றுமைசா, சிறுவர் பாதுகதப்பு உத்தியேகத்தர் IMஅ.பர்சாத், பெண்கள் சிறுவர் அலகு உத்தியோகத்தர்கள, சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள கிளைத் தலைவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.




நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணமும் பலா மர கன்றுகளும் வினியோகிக்கப்பட்டது. இதற்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அனுசரணை வழங்கியிருந்தது.


























