கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா -2018
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா - 2018 எனும் திட்டத்தின் கீழ் 2018-12-19 ஆம் திகதி புதன்கிழமை அல்ஹாஜ் முஹம்மத்தம்பி முஹம்மது மீராசாஹிவு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரி.எம்.அன்சார் தலைமையில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் க.சுதர்சன், ஜே.எம்.சிஹார், நிந்தவூர் கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அஹமட், சிரேஸ்ட ஊடவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர்கள் வீடு சென்று பாராட்டி கௌரவித்தார்கள்.
அல்ஹாஜ் முஹம்மத்தம்பி முஹம்மது மீராசாஹிவு சிறந்ததொரு கட்டிடக் கலைஞர் ஆவார். அத்தோடு தேசிய பத்திாிகைகளில் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிஞருமாவார். மேலும், இவர் மரபு வழி சண்டைக் கலையை முறையாக கற்றுக் கொண்டவர் என்பதோடு இக்கலையை பலருக்கு கற்றும் கொடுத்துள்ளார். மேலும், இசைக் கலைஞருமாவார். அத்தோடு ஒரு சித்திரக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















