நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுவின் ஊடாக 5 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 2022.11.02 ம் திகதி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ றிபாஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டட இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.


















