சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தின் ஆலோசனைக்கு இணங்க முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவின் தலைமை பீட முகாமையாளர் AC.அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் AM.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று 17.10.2022ம் திகதி நிந்தவூர் 1ஆம் மற்றும் 6ம் பிரிவுகளில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.IL.Rifas அவர்களும் ஏனைய அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் T.Jezan , நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr.K.L.M.Rais அவர்களும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.M.A.Nafeel ,ஆயுர்வேத வைத்தியர் Dr. M.Y.F.Ruvaisa அவர்களும் கலந்து கொண்டதோடு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இந்நிகழ்வின் போது போசாக்கான உணவின் முக்கியத்துவமும் போசாக்கான சத்துணவை எவ்வாறு குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்பது தொடர்பான விளக்கங்களும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டதோடு, முதியோர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது .


















