நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Hurricane Nite 2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 2022.02.03 ஆம் திகதி பி.ப 4.00 மணியளவில் நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இப் பிரம்மாண்டமான நிகழ்வினை நிந்தவூர் பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமாகிய ஏ எம் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியதுடன் இந்நிகழ்வில் கிராம நிலதாரி அலுவலக முகாமைத்துவ போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களும், உற்பத்திதிறன் போட்டியில் வெற்றி பெற உதவிய உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஓய்வு பெற்று, இடம் மாற்றலாகிச் சென்ற, அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்கலும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எம் ஏ டக்லஸ் அவர்களும் முன்னிலை அதிதிகளில் முதன்மையானவர்களுள் ஒருவருமான திகாமடுல்ல மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MC பைசல் காசிம் அவர்களும் கரையோர பிரதேச செயலாளர்களும் உதவிப் பிரதேச செயலாளர்களும் கணக்காளர்களும் நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இரவு 10.00 மணியளவில் பிரம்மாண்ட விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் சிறப்புடன் நிறைவு பெற்றன
அனைவரது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட Hurricane Nite 2022 இரவுப்பொழுது சுதந்திரமான முறையில் விடிய வேண்டும் என்று சுதந்திர தின நாளை முன்னிட்டு இனிதே நடைபெற்று முடிவடைந்தன.





















