குடியுரிமை சாசனம்

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினக் கொண்டாட்டம் -2022.
“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்”
மேற்படி நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலக முன்றலில் மிகக் கோலாகலமாக 2022.10.06 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்பமாக காரியாலய உத்தியோகத்தர்களது பிள்ளைகள் சித்திரப் போட்டியில் கலந்து கொண்டு தங்களால் வரையப்பட்ட சித்திரங்கள் கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கலை நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் இடமபெற்றதுடன் அவர்களை கௌரவித்து பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் சமூக சேவை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட முதியோர் அமைப்புக்களுக்கு ரூபா 200,000 பெறுமதியான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு v. ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள், மற்றும் கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள், விசேட அதிதிகளாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, மாவடட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் ஏனைய அதிதிகளாக முகாமையாளர்(Hatton National Bank), முகாமையாளர் (Bank of Ceylon), முகாமையாளர்(Sampath Bank), முகாமையாளர் (Regional Development Bank), முகாமையாளர் (Amana Bank), மற்றும் வர்தகப் பிரமுகர்கள், அலுவலக உத்தியோகத்தார்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top