கரையோரம் பேனல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் தேசிய கடற்கரையோரச் சுத்தப்படுத்தல் மற்றும் 156 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச செயலக கடற்கரையோரத்தை மாசடைவதிலிருந்து தடுத்து கரையோரத்தை சுத்தமாக பேணும் வண்ணம் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நேற்று 2022.09.07ம் திகதி காலை மு.ப 7.00 மணிக்கு கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளும் பங்குபற்றினார்கள்.


















