குடியுரிமை சாசனம்

 
இந்த ஆண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டம் 2022.03.18 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
 
இதில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் MC FAISAL CASSIM அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, நிந்தவூர் பிரதேச செயலக பிரதிப் திட்டமிடல் பணிப்பாளர் AM சுல்பிகார், முன் பள்ளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
இதில் விசேடமாக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் 51 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிந்தவூர் பிரதேச மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 31 முன்பள்ளிகளுக்கு தலா
ரூ 50 000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top