நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (2019.04.17) நடைபெற்று முடிந்த இரத்த தான முகாமில் சுமார் 50 பேர்கள் இரத்த தானம் செய்திருந்தனர். விஷேடமாக இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் இதில் கலந்து கொண்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மேலும் உபசரணை செலவுகளுக்கு நிதி உதவி செய்த நிந்தவூர் 02, 09, 23 ஆகிய கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்துவதற்கு துணைநின்ற சகலருக்கும் விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.























