புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விழிப்புணர் நிகழ்வு.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீதியோர விழிப்புணர் நிகழ்வு 2018-12-13 ஆம் திகதி வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களின் தலைமையில் நிந்தவூர் -04 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிராம மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளக்கங்கள்¸ மற்றும் சட்டதிட்டங்கள்¸ அமைச்சினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி திட்டங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான விளக்கங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தாகள் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது. இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு சுவட் அமைப்பு அனுசரனையுடன் நடைபெற்றது.

















