புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய போட்டியில் பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் திறந்த பிரிவு சிறுகதைப்போட்டியில் பங்குபற்றிய ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் முதலாவது இடத்தைப் பெற்று தேசிய இலக்கிய விருதை நிந்தவூர் மண்ணிற்கு பெற்றுத்தந்து எமது பிரதேச செயலகத்திற்கு பெருமையை சேர்த்தார்.
ஜெம்ஷித் ஹஸன் அவர்கள் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லதீப் அவர்களின் தலைமையில் இன்று 2022.12.12ம் திகதி பிரதேச செயலகத்தில் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் T. ஜெஸான் மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.















