சமுர்த்தி சௌபாக்கிய வேலை திட்டத்தின் கீழ் நிந்தவூர் 10 ம் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு பெரும் பயனாளிக்கு இரண்டாம் கட்டமாக ரூபா 100,000 காசோலை பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று 2022.09.30 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்துகொண்டனர்.















