கடந்த 2020 ம் ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைத் தாக்கத்தினால் ஏற்பட்ட சொத்து சேதத்திற்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு மற்றும் 2022.03.07 ம் திகதி ஏற்பட்ட சுழல் காற்றினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீட்டுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு என்பன வழங்கும் நிகழ்வு நேற்று 2022.03.31 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



















