சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தினால் குடும்ப அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் சுய தொழில் செய்வதற்கான உபகரணங்கள் நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இன்று 2022.03.07 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. இதில் நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.



















