சமுர்த்தி அரநெலு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு வளர்ப்பு தொடர்பான தெளிவூட்டல் மற்றும் கோழிக்குஞ்சு வழங்கும் நிகழ்வு இன்று சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் யுஊ. அன்வர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 01.11.2021 ம் திகதி நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி
AM. அப்துல் லத்திப், அரச கால்நடை வைத்திய அதிகாரி Dr கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர், மற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் கலந்து கொண்டணர்.














